Saturday, June 1, 2024

அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவார்!

 

யதார்த்த பொருள்: அண்ணனும் தம்பியும் உதவாத இடத்திலும் அடி (உதை) உதவும்.
 
பழமொழி கதை: 
 
ராமாயணத்தில், ராமன் கானகம் சென்றபோது.. பரதன் பின்சென்று ராமனை நாடாள அழைத்தான்.. ஆனால் ராமன் மறுத்தான். பின்னர் லக்ஷ்மணனை நாடாள அழைத்தான்.. ஆனால் லக்ஷ்மணனும் மறுத்தான். பின்னர்... ராமனை (அடி) படிந்து அவர்தம் பாதுகை பெற்று.. 14 வருடம் நல்லாட்சி செய்தான்.
 
உண்மையான பொருள்: 
 
பரதனுக்கு எப்படி அண்ணனும் தம்பியும் உதவாத இடத்தில் (திரு)அடி உதவியதோ அதேபோல் அண்ணனும் தம்பியும் உதவாத இடத்திலும் அடி (அடி பணிதல், பணிந்து போதல்) உதவும்.

No comments:

Post a Comment

வணக்கம்!!

  வணக்கம் !! என்பது மரியாதை நிமித்தமாய் சொல்லும் வார்த்தை .    இதில் காலை வணக்கம் , மாலை வணக்கம் என்றெல்லாம் கிடையாது ,இதற்கு அடை கூடாது.. ம...